Sunday, September 28, 2014

தமிழ்த்தாய்

பொதிகை மலையில் பிறந்தாய் என்போம்
சிவனின் மகளாய் வளர்ந்தாய் என்போம்

உலகின் முதல்மொழி நீதான் என்போம்
தமிழரின் கருவிழி நீதான் என்போம்

தென்றலாய் தமிழகம் வீசினாய் என்போம்
பூமணம் எங்கும் பரப்பினாய் என்போம்

முகிலாய் காற்றில் கலந்தாய் என்போம்
துகிலாய் என்மாணம் காப்பாய் என்போம்

ஆபத்தில் கூட அம்மா என்போம்
அதுவும் கூட தமிழில்தான் அழைப்போம்

எழுதும் ஏட்டிலும் பேசும் பேச்சிலும்
எங்கும் என் அன்னை நீயே என்போம்

தாயை மறந்த மகனும்  இங்கில்லை
தாய்மொழியை மறந்த தமிழனும் நானில்லை ..
என்று உறக்கச்சொல்வோம் உலகிற்க்கு ...!!!!


 நன்றி: ப.வீரகுமார்
தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு

Share this

0 Comment to "தமிழ்த்தாய்"

Post a Comment