Wednesday, October 8, 2014

சிகரம் தொடு

உழைக்கும் கரங்கள்
                     உன்னிடம் இருக்க
பார்க்கும் பார்வையில்
                    எதிரிகள் மிரல
தடைகள் என்றும்
                    உடைபட்டு கிடக்க
தமிழா நீயும் சிகரம் தொடு ..!!

அன்னை என்றும்
                  உன்பக்கம் தானே
அன்னைத் தமிழும்
                 உன்பக்கம் தானே
வேதங்கள் யாவும்
                 உன்பக்கம் தானே
வெள்வாய் நீயும் சிகரம் தொடு ..!!

மண்ணில் எங்கும்
                உன்புகழ் பரவ
மறைக்கும் கார்மேகம்
                மழையாக பொழிய
வசந்தங்கள் என்றும்
                 உன்வாழ்வில் வீச
தமிழா நீயும் சிகரம் தொடு ..!!

கதிர்பட்டு உருகும்
              பனியும் நீயில்லை
அலைப்பட்டு நகரும்
              நுரையும் நீயில்லை
வீர்கொண்டு எழுவும்
              வேங்கை நானென்று
மனிதா நீயும் சிகரம் தொடு ..!!

ப.வீரகுமார்
தமிழ்துறை இரண்டாமாடு

Share this

0 Comment to "சிகரம் தொடு"

Post a Comment