பொதிகை மலையில் பிறந்தாய் என்போம்
சிவனின் மகளாய் வளர்ந்தாய் என்போம்
உலகின் முதல்மொழி நீதான் என்போம்
தமிழரின் கருவிழி நீதான் என்போம்
தென்றலாய் தமிழகம் வீசினாய் என்போம்
பூமணம் எங்கும் பரப்பினாய் என்போம்
முகிலாய் காற்றில் கலந்தாய் என்போம்
துகிலாய் என்மாணம் காப்பாய் என்போம்
ஆபத்தில் கூட அம்மா என்போம்
அதுவும் கூட தமிழில்தான் அழைப்போம்
எழுதும் ஏட்டிலும் பேசும் பேச்சிலும்
எங்கும் என் அன்னை நீயே என்போம்
தாயை மறந்த மகனும் இங்கில்லை
தாய்மொழியை மறந்த தமிழனும் நானில்லை ..
என்று உறக்கச்சொல்வோம் உலகிற்க்கு ...!!!!
நன்றி: ப.வீரகுமார்
தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு